அம்பாரை மாவட்டத்தில் அடை மழை



தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, அறுவடை செய்யப்படவிருந்த நெல் வயல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கடந்த 04 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இதனால் அநேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ள தோடு, போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் அறுவடை செய்யவிருந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.