ஹோட்டலுக்கு தீ வைத்த மூவருக்கு விளக்கமறியல்




ஆனமடுவ நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றினை தீ வைத்துக்கொளுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 3 சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனமடுவவில் கடந்த 10 ஆம் திகதி ஹோட்டல் ஒன்று இனவாதிகளால் தீ வைத்துக்கொளுத்தப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில், பாடசாலை மாணவர்  உள்ளிட்ட 16 வயதுடைய மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.