மிளகாய் தூள் வீசி - 750,000 ரூபா வங்கியில் கொள்ளை



வத்தளையில் இயங்கும் வங்கி ஒன்றில் இன்று (27) பகல் 2.30 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மிளகாய் தூள் கொண்டு வங்கி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை தாக்கிய நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். 

வங்கியிலிருந்து 750,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.