பஸ் கட்டண அதிகரிப்பு சம்பந்தமான அமைச்சரவை பத்திரம்



பஸ் கட்டணத்தை அதிகரிப்பது குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்கு நிபுணத்துவ குழுவினர் நேற்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார். 

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்து அதனை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்க அந்த நிபுணத்துவ குழு தீர்மானித்துள்ளது. 

அதன்படி இன்று அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதுடன், அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார். 

10% வீத கட்டண அதிகாரிப்பை எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.