மலையகத்தில் ஈகைத் திருநாள்



(க.கிஷாந்தன்)

29 நாட்கள் நோன்பு இருந்து 16.06.2018 அன்று மூஸ்லீம்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடினர்.

அந்தவகையில் மலையகத்தில் மூஸ்லீம்கள் ரமழான் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி முகமட் ஷாஜகான் தலைமையில் அட்டன் மூஸ்லீம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும், பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

பிறகு தமது பண்டிகையை மூஸ்லீம் மக்கள் சந்தோஷமாக கொண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.