பஸ்ஸரயில் தீ விபத்தினால் மூன்று பெண்கள் பலி




பஸ்ஸர பகுதியில் உள்ள வியாபார நிலையமொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்கள் மூவரும் வியாபார நிலையத்தின் பின் பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வியாபார நிலைய உரிமையாளரின் மகள், மனைவி மற்றும் தாய் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.