படகு கவிழ்ந்ததில் இருவரை காணவில்லை




குருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர். 

குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக 5 நபர்கள் சென்ற படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

படகில் பயணித்த ஐவரில் மூவரை மீட்டுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காணாமல் போனவர்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.