மாத்தறை துப்பாக்கிச் சூட்டின் பிரதானி சிக்கினார்



மாத்தறை நகரத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மூன்று கொள்ளையர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொஸ்கொட தாரக என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பல கொலைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரா கொஸ்கொட தாரக அறியப்படுகிறார். 

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. 

இதன்போது கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை கூறத்தக்கது.

வீரசிங்க என்ற 69532 பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.