193 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை அணி



இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

தம்புள்ளையில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. 

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குசர் ஜனித் பெரேரா 81 ஓட்டங்களையும், திஸர பெரேரா 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

தென் ஆபிரிக்கா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஷம்சி மற்றும் ரபடா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதன்படி தென் ஆபிரிக்கா அணிக்கு 194 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.