பட்டங்களைப் பார்த்துப் பறக்க விடுங்கள் !




கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, 5 கிலோமீற்றர் தூரத்துக்குள் பட்டங்களை பறக்கவிடும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறு விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
விமான நிலையங்களுக்கு மிகவும் அண்மையில், பட்டங்களை பறக்கவிடுவதனால், விமானங்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம், அது சட்டவிரோதமானதாகும் என்றும் தெரிவித்துள்ளது.