காணாமல் போயுள்ளனர்




ஹொரணை, வகவத்தை பிரதேசத்தில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

களுகங்கையில் நீராடச் சென்று இரண்டு பேரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பஸ்ஸர, வத்துயாய மற்றும் உடபுசல்லாவ, ஹோர்டன்வத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பேரே காணாமல் போயுள்ளனர். 

காணாமல் போயுள்ள இரண்டு பேரையும் தேடும் பணிகள் கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.