கணக்காய்வு சட்டத்திற்கு கையொப்பம்




பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கணக்காய்வு சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. 

தேசிய கணக்காய்வு சட்டமூலம் கடந்த 025ம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்டமூலத்தை ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.