களுத்துறை கொள்ளைச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது




கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

களுத்துறை பாலத்திற்கு அருகில் வைத்து இவர்கள் மூவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாணந்துறை வலய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் காண்ஸ்டபிள்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.