பணி இடைநீக்கம்



வௌிநாட்டுப் பிரஜை ஒருவரிடம் 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

காலி உதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இருவர் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், அதனை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.