காற்றின் வேகம் அதிகரிக்கும்



இன்று இரவில் இருந்து, அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (குறிப்பாக மேற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகளில்) காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு
அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள்
மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில்
சிறிதளவில் மழை பெய்யக் கூடியதான சாத்தியம்
காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிரதேசங்களிலும் மற்றும் ஊவா, சப்ரகமுவ,
 மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்
 அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர்
வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென
எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக
மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில்
 பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடியதான
சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது
தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன்
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு
30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை
மற்றும் பொத்துவில் ஊடாக கல்முனை வரையான கடற்பரப்புகளில்
 காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 55
கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக்
கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாளை இரவில் இருந்து அடுத்த சில நாட்களுக்கு
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும்
 (குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில்)
காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு
அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள்
 மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவில்
மழை பெய்யக் கூடியதான சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிரதேசங்களிலும் மற்றும் ஊவா, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டளவியல் திணைக்களம்)