எல்லை நிர்ணய மீள்பரிசீலனை அறிக்கை 02 மாதங்கள் தாமதமாகும்



மாகாண சபை எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழுவின் அறிக்கை மேலும் இரண்டு மாதங்களால் தாமதமாகும் என்று ஐவரடங்கிய மீள்பரிசீலனை குழு சபாநாயகர் கருஜயசூரியவிடம் அறிவித்துள்ளது. 

சபாநாயகரின் ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு சபாநாயகரால் இன்று பிற்பகல் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.