நாமல் குமாரவின் குரல் மாதிரியை பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி



ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவின் குரல் மாதிரியை இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா உடனான தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவகள் சில, ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவினால் அண்மையில் வௌியிடப்பட்டிருந்தது.