தீ விபத்தில் ரயில் பெட்டிகள் நாசம்



தெமட்டகொட ரயில்நிலைய தரிப்பிடத்தில் இருந்த ரயிலில், திடீ​ரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இரண்டு ரயில் பெட்டிகள், முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட மூன்று தீயணைக்கும் வாகனங்கள், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ரயில் ​பெட்டிகளை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதே, அவை திடீரென தீப்பித்துள்ளன என்று தெரிவித்த பொலிஸார், இந்தத் தீ விபத்து காரணமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.