கொழும்பு, கட்டிடமொன்றில் தீ




கொழும்பு, பேபுரூக் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடமொன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு, தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது. 

எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அப்பிரதேசத்தில் பாரிய புகைமூட்டங்களை காணக்கூடியதாக உள்ளது. 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.