காணாமல் போன மீனவர்களைத் தேடும் படலம்




பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதில் காணாமல் போன இருவரையும் தேடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அகில இலங்கை பொது மீன்பிடி சங்கம் கூறியுள்ளது. 

மீன்பிடிக்க சென்ற படகுடன் மோதி கப்பல் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு அரசு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே கூறினார். 

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறினார். 

அண்மையில் பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதில் நால்வர் உயிரிழந்ததுடன் இருவர் காணாமல் போயுள்ளனர்.