கொட்டகலையில்,கொட்டியது குளவி




(க.கிஷாந்தன்)
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 08 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிலக்காகியுள்ளனர். இச்சம்பவம் 28.09.2018 அன்று இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 08 பேர் ஆண் தொழிலாளர்களாவர்.
இவர்களில் 8 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.