DIG நாலக சில்வா தொடர்பில் முழு அறிக்கை கோரும் பிரதமர்




பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தொடர்பிலான விசாரணை செய்து முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளார். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார். 

பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.