பகல் கொள்ளை




ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள கிராமிய வங்கி ஒன்றில் இருந்து 4 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (25) மதியம் 2 மணியளவில் முகத்தை மூடியவாறு தலைக்கவசம் அணிந்து கொள்ளைக்காரர் ஒருவர் துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. 

குறித்த சந்தேகநபர் வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களுக்கு துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்து செல்லும் விதம் வங்கியில் உள்ள சிசிரிவி கெமராக்களில் பதிவாகி இருந்தது. 

இதேவேளை குறித்த சந்தேகநபர் வங்கியில் சேவையாற்றும் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி ஒன்றையும் பரித்துச் சென்றுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.