புகையிரத விபத்து - இருவர் கவலைக்கிடம்






மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் ஹிக்கடுவ பகுதியில் வைத்து லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மருந்து பொருட்கள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் லொறியின் ஓட்டுனர் மற்றும் மற்றுமொரு நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.