தீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டும் ஒரு நாள்


இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தீபாவளி தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த சூழ்நிலையில், இந்த தீபத்திருநாளானது தீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டப்படுகின்ற ஒரு நாளாக அமைவதோடு, எமது மக்கள் நிரந்தரமான சமாதானத்தையும் உண்மையான சுதந்திரத்தினையும் அடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்கிறேன். எமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் இடர்கள் நீங்கி வளம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. 

எமது மக்களும் இந்த நாடும் ஒரு சுபீட்ஷமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற இந்த நன்னாளில் இறைஞ்சுவோமாக என அவர் குறிப்பிட்டுள்ளார். 

(யாழ். நிருபர் பிரதீபன்)