அம்பாரையில் வினாப்பத்திரமின்றி பரீட்சாத்திகள் பரிதவிப்பு



அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலை மற்றும் பண்டாரநாயக்க பெண்கள் பாடசாலை ஆகியவற்றிற்கு சாதாரண தர பரீட்சை எழுத சென்ற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வினாப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இன்று இசை, நடனம், ஓவியக்கலை உள்ளிட்ட பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று இடம்பெறுகின்றன.
குறித்த பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாமையினால் சுமார் 300 மாணவர்கள் தங்களது ஆசனங்களில் நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.