புதிய மருத்துவ பீடம் 17 ஆம் திகதி ஆரம்பம்


நாட்டில் மருத்துவக் கல்வித் துறையை விரிவாக்கும் நோக்கில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்தாக குருவிட்ட, பட்டுஹேன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ பீடம் எதிர்வரும் 17 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த மருத்துவ பீடத்துக்கான போதனா வைத்தியசாலையாக இரத்தினபுரி வைத்தியசாலை தர மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வும் அதேதினம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த மருத்துவ பீடத்தை திறந்து வைக்கும் தினத்தில் முதல் கட்டமாக 75 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.