பக்தர் ஒருவர் தீயிட்டு கொண்டதால் கதிர்காமம் ஆலயத்தில் தீ பரவல்


கதிர்காமம் விஷ்னு ஆலயத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (03) அதிகாலை பக்தர் ஒருவர் உடலில் தீயிட்டுக் கொண்டு விஷ்னு ஆலயத்திற்குள் நுழைந்ததன் காரணமாக இவ்வாறு தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பின்னர் தீ பரவலை கட்டுப்படுத்தி தீக்காயங்களுக்கு உள்ளான நபரை ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீயிட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்வபம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.