பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பல்லத்தர, மொதரவான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு இன்று (20) காலை சென்ற அவருடைய உறவினர் ஒருவரே, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை உறுப்பினர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லத்தர, மொதரவான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு இன்று (20) காலை சென்ற அவருடைய உறவினர் ஒருவரே, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை உறுப்பினர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment