தீப்பரவல்


(க.கிஷாந்தன்)
ரந்தனிகல - மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் காரணமாக இந்த வனத்தில் இது வரை 3 ஏக்கர் வரையான இயற்கை வளம் எரிந்து நாசமாகியுள்ளது.
வனப்பகுதிக்கு மிருக வேட்டைக்காக சென்றவர்கள் இவ்வாறு தீ வைத்திருக்க கூடும் என வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
வேகமாக பரவி வரும் தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.