பதியதலாவ பிரதேச சபையின் தலைவர் கைது


அம்பாறை, பதியதலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளடங்கலாக மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதியதலாவ பிரதேச சபையில் ஊழியர்  ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மூவரையும் இன்று (31) தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.