‘காற்றின் வேகம் அதிகரிக்கும் ’


மேல் மாகாணத்தின் கடற்கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ வரை வேகமாக காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடகிழக்கு ஆகிய மாகாணங்களிலும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.