பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ணம் முதற்தடவையாக இலங்கைக்கு


6 ஆவது பொலிஸ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. 

இங்கிலாந்தின் வுஸ்டன் நகரில் இடம்பெற்ற பொலிஸ் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மேற்கு அவுஸ்திரேலியா பொலிஸ் அணியை வீழ்த்தி இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளது. 

ஆசிய பொலிஸ் கிரிக்கெட் அணி ஒன்று உலக பொலிஸ் கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா உட்பட 9 நாடுகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணியை பொலிஸ் கிரிக்கெட் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அதிகாரி புஷ்பகுமார தலைமை தாங்கியதுடன் வெற்றி பெற்ற இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கை வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.