கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரே உண்ணாவிரதத்தை குழப்பினார்


பாறுக் ஷிஹான்

கூட்டமைப்பை சேர்ந்த  ஒருவர் மீண்டும் உண்ணாவிரத்தை தொடர்வதாக கூறியதனால் கல்முனை தமிழ் பிரதேச செயலக தொடர்பில் தற்போது புலி சாயம் பூசிய கருத்துக்கள்  வெளியாவதாகவும் இவ்வாறு கருத்து  வெளியிடும் முன்னாள் அமைச்சர் ஹரீஸ் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை. அதனால் தான் புலம்பி திரிவதாக உண்ணாவிரதம் மேற்கொண்ட தமிழர் முற்போக்கு  முண்ணனி அமைப்பின் உறுப்பினருமான கி.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாண்டிருப்பில் உள்ள தனது வீட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் முற்போக்கு  முண்ணனி அமைப்பின் தலைவருமான சதாசிவம் வியாளேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(18) நடாத்தப்பட்டசெய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில் 


உண்ணாவிரதத்தை கைவிட கூறிய தேரர்களின் வேண்டுகோளை  கூட்டமைப்பை சேர்ந்த  ஒருவர்  ஏற்காது மீண்டும் உண்ணாவிரதம் இருப்பதாக. உதாசீனப்படுத்தினார். இதனையடுத்து உண்ணாவிரதத்தை நிறுத்த வந்த பௌத்த  தலைவர்கள் சீற்றம் கொண்டனர். இதன்போது அவர்கள் முப்பது வருடகாலமாக தமிழ் தேசிய தலைவர்களுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். எமக்கும் சந்தர்ப்பத்தை தாருங்கள். உண்ணாவிரதம் இருந்த எங்களை பௌத்த தலைமைகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது வாக்குறுதிகளை அமையவே நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம் .எனினும் உண்ணாவிரத்தில் பங்கேற்றவரின் அடம்பிடிப்பு தான்
 தற்போது இதன் தொடர்ச்சியாகவே கல்முனை தொகுதி முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ் என்பவர்  கல்முனை நகரம் முஸ்லீம்களின் சொத்து என கூறி வருகின்றார்.இவர்  பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை. இதனால் தான் வரலாறு தெரியாது புலம்புகின்றார்.நான் படித்த பாடசாலையிலே அவரும் படித்திருந்தார்.ஆனால் பாடசாலைக்கு ஒழுங்காக அவர் வருவதில்லை.இவர் இலங்கை சுதந்திரமடைந்த நிலையில் இருந்து கல்முனை நகரம்  முஸ்ஸீம் மக்களின் சொத்து என்று கூறுவது அப்பட்டமான பொய்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கல்முனை சேர்ந்தவர்கள் யார் அமைச்சர்களாக இருந்தார் என்பது உலகுக்கே தெரியாத ஒன்று.கல்முனை வடிவமைத்தவர்கள் என்று  சொல்பவர்கள் அவர்களுடைய சொந்த நிதியில் வடிவ அமைக்கவில்லை இவ்வாறு சொல்லி திரிபவர்கள்  தோட்டம் ,சொத்துகளை விற்று இந்த கல்முனை நகரத்தை  அமைக்கப்படவில்லை  .ஆகவே ஒவ்வொரு சாதாரண குடிமகன் அது வரி பணத்திலிருந்து தான்  இந்த கல்முனை நகரம் அமையப்பெற்றது .

புலிகளின் ஆயுத முனையில் தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அமைக்கப்பட்டது  என்று காலாகாலமாக ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து பதவிகளை பெறுகின்ற நீங்கள் இது சட்டவிரோதமானது என அவர்களுக்கு சுட்டிக்காட்டி இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இல்லாமல் செய்து வருவது வேதனை தருகிறது.

இன்று மக்கள் தங்களது உரிமைகளை கேட்டு உண்ணாவிரதம் போராட்டங்கள் செய்த நிலையில் இதனை ஜீரணிக்க முடியாத நீங்கள் உட்பட சக்திகள் புலிச்சாயம் பூசி திரிகின்றனர்.

அத்துடன் திருமணத் தொடர்பு கலாச்சார தொடர்பு கொண்ட சாய்ந்தமருது முஸ்லிம்களுடன் கல்முனை வாழ் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இவ்வாறு உள்ள நிலையில் கல்முனையில் வாழும் தமிழர்களுக்கு எந்த வகையில் நியாயமான தீர்வினை கொடுப்பார்கள் என்பது தான் போது எழுகின்ற கேள்வி என குறிப்பிட்டார்.