என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா,இறுதி நாள்





யாழ் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக புதிய தொழில் முயற்சியாளர்கள் 2 ஆயிரம் பேர் நன்மையடைந்துள்ளனர். யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறும் இக்கண்காட்சியை பார்வையிட முதல் மூன்று நாட்களில் 3 இலட்சம் பேர் வருகைதந்தனர்.
தங்க அறுவடை, கொவி நவோதா உள்ளிட்ட கடன் திட்ட ங்களினூடாக தொழில் முனைவோருக்கு நிவாரண கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களுக்கும், புனர்வாழ்வளிக்கப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் விசேட வேலைத்திட்டங்களும் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. யாழ் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா இறுதிநாள் நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.