இ.தொ.கா ஆதரவு,கோட்டாபாய ராஜபக்சவிற்கு


(க.கிஷாந்தன்)
2019 நவம்பர் 16 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 13.10.2019 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக 13.10.2019 அன்று காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியது.
இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.