பாலமுனையில் முப்பெரும் விழா



(பர்ஷாத் JP)
பாலமுனை ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கி வருகின்ற மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியில் அல் ஆலிம் கெளரவிப்பு நிகழ்வு, 9 ஆண்டு பூர்த்தி நிகழ்வு, பரிசளிப்பு நிகழ்வு என முப்பெரும் விழா 2019.10.10ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் கல்லூரி முன்றலில் இடம்பெறவுள்ளது. 
கல்லூரியின் தலைவர்  ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் A. சாஹுல்ஹமீட் JP,  பாலமுனை ஜும்மாபெரிய பள்ளிவாசல் தலைவர் MA. அன்சார் ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி அதிபர் அஷ்ஷேக் மெளலான மெளலவி  AL. ஸாஜித் ஹூசையின் (பாகவி) BA Hons தலைமையில் இடம் பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமிய  அறபுக் கல்லூரி,  காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி என்பவற்றின் அதிபர் அஷ்ஷேக் மெளலான மெளலவி  AM. றஹ்மத்துல்லாஹ் (பலாஹி) அவர்களும் சிறப்பு சொற்பொழிவாளராக கொழும்பு தாருல் அர்கம் அறபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷேக் மெளலான மெளலவி  ஆஷிக் அபுல் ஹஸன் (றஸாதி)  அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.