கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றார்


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ இன்று சுமார் 11 மணியளவில் அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரையில் ஆதிகாரபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தவின் பிறந்தநாள் இன்று என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.