அக்கரைப்பற்றில் மானுட நேயன் முர்சலீன் காக்காவிற்கு கௌரவம்!



#றிஸ்வான்சாலிஹ்)
அக்கரைப்பற்று, SHF அமைப்பினரானால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நற்பணியாளர் அல்ஹாஜ் முர்சலீன் காக்காவிற்கான கௌரவிப்பு வெள்ளிக்கிழமை மாலை 6.45-8.45 வரை இடம் பெற்றது.

SFH அமைப்பின் சார்பில் அதன் தலைவர் மர்சூக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அல்ஹாபிழ் மெளலவி ஹாதி இஸ்லாத்தில், சமூக சேவை என்ற தொனிப் பொருளில் உரை நிகழ்தினார். அக்கரைப்பற்று ஜம் இய்யத்துல் உலமாவின் உபதலைவர் அல்ஹாஜ் அஸ்ரப் சர்க்கி அக்கரைப்பற்று மக்களுக்கு அல்ஹாஜ் முர்சலீன காக்கா ஆற்றிய பணிகள் பற்றி பிரஸ்தாபித்தார்.

அக்கரைப்பற்று கொடையாளிகளால் கொடுக்கப்பட்ட ருபா 150 000 பெறுமதியான காசோலை முறுசலீன் காக்காவுக்கு வழங்கப்பட்டது.


கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலாவுதீன், வலயக் கல்வி முன்னாள் பணிப்பாளர் ஹாசீம், முகாமைத்துவ உதவியாளர் ஜெய்னுதீன் அண்ணன் அழகையா ஆகியோர் பொன்னாடை போரத்திக் கௌரவித்த அதேவேளை, அக்கரைப்பற்று #Elents Trade நிறுவன உரிமையாளர்களான  அல்ஹாஜ் நிசார் மற்றும் யஹ்யா ஆகியோரும், அக்கரைப்பற்றில் அதிக காலம் முறுசலீன் காக்கா அன்று தொழில் புரிந்த நிறுவனமான லங்கா ஸ்ரோஸ் நிறுவனத்தின் இயக்குனர் அல்ஹாஜ் ஜெலிலுர் ரஹ்மான் ஆசிரியரரும் ஞாகப் பரிசில்களை வழங்கி வைத்ததுடன் கலந்து கொண்டிருந்த பார்வையாளர்களின் அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.

SFH அமைப்பின் முக்கியஸ்தர் மஹ்புப் வாழத்துக் கவிதை பாடி, நினைவுப் படிகம் வழங்கி வைத்தார்.


இந் நிகழ்வு ஏற்பாடுகளை தனியாட்களாக  இர்பான் (LIZRA) ,நௌபல்(ஆசிரியர்), மஹ்புப், றியாட் மொஹிடின் ஆசிரியர், கணக்காளர் மர்சூக் ஆகியோர் திறமபடச் செய்திருந்தனர்.