“எங்கள் குடும்பம் எங்கள் வீடு”


(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ கீழ்பிரிவு தோட்டத்தில் 50  தனி வீடுகளை கட்டி அமைக்க 23.02.2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் “மலையக எழுச்சி” செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நெறிப்படுத்தலில் “எங்கள் குடும்பம் எங்கள் வீடு” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்போது இவ் நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், இ.தொ.கா பொது செயலாளர் அனுஷா சிவராஜா, இ.தொ.கா இளைஞரணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இதன்போது அமைச்சர் மாலையிட்டு வரவேற்கப்படுவதையும், அதிதிகள் அடிக்கல் நாட்டி வைப்பதையும் இங்கு படங்களில் காணலாம்.