கடற்படை முகாமிலும் கண்காணிப்பு நிலையம்



பூசா கடற்படை முகாமில் கண்காணிப்பு நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று (17) முதல் இந்த கண்காணிப்பு நிலையம் இயங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
4 மாடிகளை கொண்ட குறித்த கட்டடத்தில் 136 பேர் தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நேற்று நாட்டை வந்தடைந்தவர்கள் நேற்று கட்டுநாயக்கவிலிருந்து வவுனியா பம்பைமடு இராணுவ முகாமின் கண்காணிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அநுராதபுரம் – மெத்சிரிபுர சிறுநீரகநோய் பிரிவையும் கண்காணிப்பு நிலையமாக பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.