மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்று திறக்கப்படவுள்ளன.
கொரோனா அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்கள் அடங்களாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் 19 மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருந்தகங்கள்  அனைத்தும் திறக்கப்படவுள்ளன.
இதற்கமைய இன்றுக் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.