ஆர்டிக் டீசல் கசிவு: ரஷ்யாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியை மாசுபடுத்தியது


ஆர்டிக் பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் சுமார் 20,000 டன் டீசல் கசிந்ததை அடுத்து, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அவசரநிலையை பிறப்பித்திருந்த நிலையில், தற்போது அந்த டீசல் கசிவு நன்னீர் ஏரி ஒன்றை மாசுபடுத்தியுள்ளது.

மேலும், இந்த டீசல் கசிவு ஆர்டிக் பெருங்கடலுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிப்பொருள் தொட்டி சேதமடைந்தபோது இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.

ஆர்டிக் டீசல் கசிவுபடத்தின் காப்புரிமைAFP

20 கிலோ மீட்டர் தூரம் பரவியிருக்கும் இந்த கசிவை கட்டுப்படுத்த அவசர நிலைக்குழுக்கள் முயற்சி செய்து வருகின்றன.

தற்போது அம்பர்ன்யா நதி மற்றும் அதன் சுற்றியுள்ள நிலப்பரப்பில் 21 ஆயிரம் டன் எண்ணெய் கலந்துள்ளது.

இந்த எண்ணெய் கசிவு நீர் ஆதாரங்களை பாதிப்பதோடு, இதை குடிக்கும் விலங்குகள், கரையில் வளரும் செடி கொடிகள் ஆகியவை மீதும் தாக்கத்தை உண்டாக்கும் என சூழலியாளர்கள் கூறுகின்றனர்.