#ரிவர்ஸ் ஸ்விங் - கலையும், அறிவியலும்


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால், பந்தை எச்சிலை கொண்டு பளிச்சிட செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறிய முதல் வீரராக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டோம் சிப்லே அறியப்படுகிறார்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் நான்காவது நாளில் இந்த சம்பவம் நடந்தது. ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டோம் கவனக்குறைவாக தனது எச்சிலை கொண்டு பந்தை பளிச்சிட செய்தார்.

தனது விதிமீறல் குறித்து சிறிது நேரத்திற்கு பின்னர் உணர்ந்த அவர், அணியின் நிர்வாகத்திடம் அதைக் கூறினார். பின்னர் இதுகுறித்து அம்பயர்களிடம் தெரிவிக்கப்பட்டு பந்து சுத்தப்படுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை பெரும்பாலான தருணங்களில் வீரர்கள் கடைபிடித்தாலும், போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது இதுபோன்ற சம்பவங்கள் கவனக்குறைவாக நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் 'தசை நினைவகம்'. அதாவது, பல ஆண்டுகளாக செய்து வரும் விடயத்தை, மீண்டும் மீண்டும் செய்வதைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக, நீங்கள் 10 ஆண்டுகளாக வாகனம் ஓட்டினால், கியர்களை மாற்றும்போது உங்கள் கால் தானாகவே கிளட்சை நோக்கி நகரும்.

அதேபோல், ஒரு கிரிக்கெட் போட்டியின்போது பந்து ஏதேனும் ஒரு ஃபீல்டர் அல்லது பந்து வீச்சாளரிடம் சென்றால், அவர்கள் அதை அடிக்கடி எச்சிலை கொண்டு மெருகூட்டி, பந்து வீச்சாளர் அல்லது விக்கெட் கீப்பரிடம் திருப்பித் தருகிறார்கள். இவை அனைத்தும் ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங்கிற்காக செய்யப்படுகின்றன. இது விளையாட்டு வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களால் 'தி டார்க் ஆர்ட் ஆஃப் கிரிக்கெட்' என்றும் அழைக்கப்படுகிறது.

பந்து ஏன் எச்சிலை கொண்டு மெருகூட்டப்படுகிறது?
கிரிக்கெட்டில் பந்தின் ஒரு பகுதியை பளபளப்பாகவும் கனமாகவும் வைத்திருப்பதுதான் அதில் எச்சிலை கொண்டு பளிச்சிட செய்வதற்கான முக்கிய காரணம். தொடர்ந்து பல முறை இதைச் செய்வது பந்தின் ஒரு பகுதியை கரடுமுரடாகவும், மற்றொன்று பகுதியை வழவழப்பாகவும் ஆக்குகிறது.

அதாவது, ஒரு பகுதி அதன் மற்றொரு பகுதியைவிட சற்று கனமாக இருக்கும். இது கிரிக்கெட்டின் மொழியில் ஸ்விங் என்று அழைக்கப்படும் பந்தை காற்றில் சுழல வைக்க உதவுகிறது.

கிரிக்கெட்பட மூலாதாரம்,GETTY IMAGES
இது பந்துச்சாளர்களுக்கு சாதாரண ஸ்விங் செய்வதற்கு மட்டுமின்றி போட்டியின் கடைசி கட்டங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் லேட் ஸ்விங் செய்வதற்கும் உதவுகிறது.

ஒரு ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சாளருக்கு 'தூஸ்ரா' வகை பந்துவீச்சு செய்வது எவ்வளவு கடினமோ, அதே போன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் செய்வது என்பது விளையாட்டின் மிகவும் கடினமான அம்சங்களில் ஒன்றாகும்.

லேட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் சாதாரண ஸ்விங் அனைத்தும் பந்தின் மடிப்பு அல்லது மடிப்பு பிடியைப் பொறுத்தது.

பந்தின் ஒரு பக்கத்தை மெருகூட்டுவதே எல்லா வகையான ஸ்விங்கிங்கிற்கும் தேவையான ஒன்று. இதனால்தான் வீரர்கள் பெரும்பாலும் பந்தின் மற்ற பகுதியை உடனடியாக கடினமாக்க முயற்சிக்கிறார்கள். இருப்பினும், இது விளையாட்டின் விதிகளுக்கு எதிரானது ஆகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பந்தின் ஒரு பகுதியை மெருகூட்டுவதற்கான நீண்ட செயல்முறைக்கு பதிலாக, இது 'பந்து சேதப்படுத்துதல்' என்று அழைக்கப்படுகிறது.

'பாகிஸ்தானியர்கள் வியர்வையில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது'
எச்சிலை கொண்டு பந்தை மெருகூட்டி ஸ்விங் செய்யும் முறையை கையாண்டே 1980 மற்றும் 1990களில் இரண்டு பந்துவீச்சாளர்கள் எதிரணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார்கள்.