#பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர்




(க.கிஷாந்தன்)

 

மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் நேற்று (19.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ. பாஸ்கரன் தெரிவித்தார்.

 

வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் கட்டட நிர்மாணப்பணி உதவியாளர்களாக பணியாற்றிய 35 மற்றும் 19 வயது இளைஞர்கள் இருவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் திகதி பிரொக்மோர் பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.

 

இவர்கள் இருவரிடமும் கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனைகளில் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இவர்களை இருவரும் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று (19) அழைத்துசெல்லப்பட்டனர்.