பாலமுனையில் சருகுப்புலி பிடிப்பட்டது


 


அம்பாறை மாவட்டம்  பாலமுனை மையவாடி பின்பகுதியில் சருகுப்புலி ஒன்று பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.


 மக்கள் வாழும் பகுதியில்  வியாழக்கிழமை  (3) இரவு  சருகுப்புலி  உள் நுழைந்து  கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடியுள்ளது.

இதனை அறிந்த  பொதுமக்கள் சிலர் குறித்த சருகுப்புலியை   பிடித்துள்ளதுடன்      வனஜீவராசி திணைக்கள  அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர்.
--