கல்முனை வெறிச்சோடியது


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த  பிரதேச  வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதனை காணப்படுகின்றன.

கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு நேற்று (28)இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று கல்முனை பொதுச் சந்தை  ,கல்முனை பஸார், கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பொதுப்போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கல்முனை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து எந்தவொரு பேருந்து சேவையும் இடம்பெறவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.

நேற்றைய தினம்  மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் இப்பகுதியில்  32 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டதை தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும்,தொற்றாளர்களை இணங்கான்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தனிமைப்படுத்த பட்டுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்....