கார் திருட்டு வழக்கின் குற்றவாளி ஒருவருக்கு சவுதி நீதிமன்றம் ஒன்று வழங்கிய விசித்தர தீர்ப்பு.


தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் கார்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சவுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபிய துரைஃப் (Turaif) பகுதியில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம் ஒன்று விசித்திரமான தண்டனை ஒன்றை வழங்கியுள்ளது.

கார்களை திருடிய குற்றத்திற்காக அவர் துரைஃப் (Turaif) பகுதி நகராட்சியின் மேற்பார்வையின் கீழ் பொது வீதிகளில் நடப்பட்டிருக்கும் 20 ஒலிவ் (olives) மரங்களில் ஏறி ஒலிவ் காய்களை பறித்துக் கொடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் ஒவ்வொரு மரத்திற்கும் அவர் தலா 6 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் அத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.