ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி


 


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் இருவாரங்களை கடந்து  தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரமின்றி வீடுகளில் தங்கியிருக்கும்; மக்களுக்கான உலர் உணவுப்  பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.


இதற்கமைவாக அம்பாறை ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் பிரிவிலும்; சுமார் 6056 பேருக்கான தலா 10ஆயிரம் ருபா பெறுமதியான 6 கோடி ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் பணிப்புரை மற்றும் அவரது ஒத்துழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதியின் கண்காணிப்பின் கீழ் பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால்  பொருள் விநியோகங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக முதற்கட்டமாக 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இன்று முதல் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பொதியில் அரிசி சீனி பருப்பு கோதுமைமா பால்மா பைக்கற் மற்றும் பெண்களுக்கான கைஜின் பொருட்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழிலுக்கு செல்லமுடியாமல் கஸ்டத்தின் மத்தியில் இக்கட்டான நிலையில் வாழும் தமக்கு அரசாங்கம் வழங்கிய உலர் உணவுப்பொதிக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக அங்கு வாழும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இப்பணியை சிறப்பாக முன்னெடுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி கூறினர்.