இறக்குவானை உள்ளிட்ட மேலும் பல பகுதிகள் முடக்கம்


 


இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, கொடகவெல மற்றும் எஹலியகொட ஆகிய பகுதிகளில் சில இடங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

கொடகவெல பிரதேச சபைக்குட்பட்ட இறக்குவானை நகர், இறக்குவானை வடக்கு, இறக்குவானை தெற்கு, மசுமுல்ல, கொட்டலை ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எஹலியகொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மின்னான, விலேகொட, யகுதாகொட, அஷ்காகுல்ல வடக்கு, போபத்த ஆகிய பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது